Monday, October 25, 2010

அன்னையை போற்றுவோம்

பொறுமையாய் எங்களை
பூமியில் ஈன்றவள்
பூமியில் ஈன்றமைப்
பூவாகக் காத்தவள்
வறுமையின் எதிர்ப்பிலும்
வளமாகக் காத்தவள்
வளமாகக் காத்தெம்மை
வாழ்வித்த தாயவள்

பெற்று முகர்ந்தவள்
பெருமையைக் கொண்டவள்
பேரிட்டுப் பூரித்து
பாராட்டி வளர்த்தவள்
கற்றுச் சிறந்திட
கதை பல சொன்னவள்
கண்கண்ட தெய்வமாம்
அன்னையைப் போற்றுவோம்

உதிரத்தை பாலாக்கி
உண்ணக் கொடுத்தவள்
அடுத்தவர் பசிக்குத்தன்
உணவையும் கொடுப்பவள்
அதிர்ந்து பேசாமலே
அன்போடு அணைப்பவள்
அகிலத்தில் தெய்வமாம்
அன்னையை போற்றுவோம்

No comments:

Post a Comment