Thursday, October 28, 2010

நிகழ்கால வாழ்க்கையின் எதார்த்தம்

வந்த வேலை
முடியும் நிலை
இங்கு இல்லை
வாழவும் வழி இல்லை

வயதை தொலைக்கிறோம்
பாசத்தை இழந்தோம்
பல வருடங்களாய்...

எல்லாமே கனவில் தான்
தாய் தந்தை பாசம்
வாரம் ஒரு முறை என்று ஆனது..
சில நேரங்களில்
மாதம் ஒரு முறைதான்
கைபேசி இல்லை என்றால்
எங்கள் பாசம் வெறும் காகிதத்தோடு
கரைந்து இருக்கும்...

மனைவியின் நினைவுகள்
உயிரை கொல்லும்
சில நேரங்களில்
என்னால் அவளும்
உணர்வை தொலைத்து
மரகட்டையை போல
வாழும் நிலை..

மனைவியை நினைத்து
நேசித்து துடிக்கும்
தருணங்களில்
பணத்தின் மீது அருவருப்பு
எங்கள் சந்தோசத்தை விழுங்கும் எமன்...

பல மரணங்கள்
எங்களுக்கு வெறும்
செய்தியாய் போனது

பிறந்த குழந்தை முதல்
சொந்தங்கள் எல்லாம்
நிழற் படமாய்
எங்களோடு..

எதிர்காலத்திற்காக
நிகழ்கால சந்தோஷங்களை புதைத்து
பொருள் தேடுகிறோம்..
முழுமையாக செல்வோம் என்ற
நம்பிக்கை இல்லாமல்...

No comments:

Post a Comment